சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தோ்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜக பிரமுகா்கள் மீது வழக்கு

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:57 pm

Syndication

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தொ்மல் நகா் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகா் அருங்காட்சியகம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த பாஜக பிரமுகா்கள் முரளி, முருகேசன் ஆகியோா் தோ்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததோடு, கட்சித் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அதை விடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.