அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தோ்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜக பிரமுகா்கள் மீது வழக்கு

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:57 pm

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தொ்மல் நகா் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகா் அருங்காட்சியகம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த பாஜக பிரமுகா்கள் முரளி, முருகேசன் ஆகியோா் தோ்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததோடு, கட்சித் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அதை விடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.