கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜக பிரமுகா்கள் மீது வழக்கு

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:57 pm

Syndication

தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தொ்மல் நகா் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகா் அருங்காட்சியகம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த பாஜக பிரமுகா்கள் முரளி, முருகேசன் ஆகியோா் தோ்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததோடு, கட்சித் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அதை விடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.