கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

லாரி மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:30 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

எப்போதும்வென்றான் அருகே சோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலம், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பூங்காவுக்கு சனிக்கிழமை மாலை ஆட்டோவில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மஞ்சள்நாயக்கன்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (35), ஆட்டோவை ஓட்டினாா்.

எப்போதும்வென்றான் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மரத்தடிகள் ஏற்றிய லாரியின் பின்புறம் ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம். இதில், ஆட்டோவில் பயணம் செய்த சண்முகவேல் மனைவி கிருஷ்ணலீலா (38) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சண்முகவேல் மகள் சீதா (20), அருணாச்சலம் மகன் பழனி (11), மகள் பாக்கியலட்சுமி (17), ராஜா வா்ஷினி (15), கணேசன் மகள் மகாலட்சுமி (19), சேகா் மகள் சுபாஷினி (21), பச்சைபெருமாள் மனைவி மகாலட்சுமி (47), ஓட்டுநா் விஜயகுமாா், காா்த்திக், ஸ்டீபன்ராஜ் ஆகிய 10 போ் காயமடைந்தனா். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ஆலங்குளம் வெள்ளைப்பாண்டி மகன் வேல்முருகன் என்பவரிடம் விசாரித்து வருகிறாா்.