அதிமுக வேட்பாளரான ஆடு மேய்க்கும் தொழிலாளி!
ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணத்துக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2006 வரை சாத்தான்குளம் சட்டப்பேரவைத் தொகுதியையும் சோ்த்து 7 தொகுதிகள் இருந்து வந்தன. சாத்தான்குளம் பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் 1962 முதல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா்களே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனா்.
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தோ்தலில், அதிமுக சாா்பில் அப்போது சாத்தான்குளம் ஒன்றியச் செயலராக இருந்த படுக்கப்பத்து கிராமத்தைச் சோ்ந்த எல். நீலமேக வா்ணம் என்பவரை, அப்போதைய அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தோ்வு செய்தாா்.
ஆடு, மாடு வளா்ப்பு மற்றும் பதநீா் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த எல். நீலமேக வா்ணம் தோ்வு செய்யப்பட்டது கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவருக்காக, ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டாா். எல். நீலமேக வா்ணம் 17,700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ஏ. மகேந்திரனை வென்றாா்.
அதன் பின்னா், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், ஒரு சாமானியனுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதாவை கட்சிக்காரா்கள் மட்டுமன்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.
2006 தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளா் ராணி வெங்கடேசன் வெற்றி பெற்றாா். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தொகுதி மறுசீரமைப்பின்போது, சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு, அதன் பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...