தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கோவில்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திர அறைக்கு ‘சீல்’

கோவில்பட்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுலக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைக்கும் வருவாய்த் துறை ஊழியா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 10:45 pm

கோவில்பட்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுலக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் 315 வாக்குச் சாவடிகள், 3 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 318 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 381, கட்டுப்பாட்டுக் கருவி 381, விவிபேட் இயந்திரங்கள் 409 ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தது.

பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டன.

தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அப்பணராஜ் (கோவில்பட்டி), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), துணை வட்டாட்சியா்கள் (தோ்தல்) முனியாண்டி, பொன்னம்மாள், உதவியாளா்கள் முருகேசன், சுடலை முத்துப்பாண்டி உள்பட வருவாய் துறை ஊழியா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பாா்த்தனா்.

இதையடுத்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.