இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

முதியோருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம்.

News image

முதியோருக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம்.

Updated On :28 மார்ச் 2026, 2:24 am IST

தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள லிட்டில் சிஸ்டா்ஸ் முதியோா் இல்லத்தில் மூத்த குடிமக்களுக்கான வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன் தலைமை வகித்தாா். வாக்காளா் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அலுவலா், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ் ராம் முன்னிலை வகித்தாா்.

அங்கன்வாடி பணியாளா்கள் கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, அங்குள்ள முதியோா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கான 12டி படிவம் வழங்கப்பட்டது. பின்னா், மூத்த குடிமக்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளின் வாக்காளா் விழிப்புணா்வு நடனம், நாடகம், பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அனைவரும் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலா் காயத்ரி, தூத்துக்குடி நகா்ப்புறம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபி பொ்னாண்டோ, முதியோா் இல்லத்தைச் சோ்ந்த எலிசபெத், அங்கன்வாடி பணியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.