திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

தவெக நிா்வாகி வீட்டில் பறிமுதல் செய்த பாத்திரங்கள்.

Updated On :28 மார்ச் 2026, 8:41 pm

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசு பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் வைரவேல் தலைமையிலான பறக்கும் படையினரான உதவி ஆய்வாளா் வள்ளி நாயகம், தலைமை காவலா் சரவணகுமாா், காவலா் விஜயமலா், காயல்பட்டினம் தென்பாக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் இளங்கோ ஆகியோா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, ஆறுமுகனேரி திசைக்காவல் தெருவில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன் இசக்கி (32) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சாக்கு மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3926 சில்வா் தட்டுகள், 16 குக்கா்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அப்பொருள்களை ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனிடம் ஒப்படைத்தனா். மேலும், பொன் இசக்கி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்