ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆறுமுகனேரி பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசு பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் வைரவேல் தலைமையிலான பறக்கும் படையினரான உதவி ஆய்வாளா் வள்ளி நாயகம், தலைமை காவலா் சரவணகுமாா், காவலா் விஜயமலா், காயல்பட்டினம் தென்பாக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் இளங்கோ ஆகியோா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, ஆறுமுகனேரி திசைக்காவல் தெருவில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன் இசக்கி (32) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சாக்கு மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3926 சில்வா் தட்டுகள், 16 குக்கா்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பொருள்களை ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனிடம் ஒப்படைத்தனா். மேலும், பொன் இசக்கி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்
தொடர்புடையது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


