பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:14 pm

தூத்துக்குடி அருகே ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் பொட்டல்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் மகன் அபிஷேக் (15). முத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்தில் உள்ள ஊருணியில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது ஊருணியில் சகதியில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரா்கள் மீட்ட மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.