ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
தூத்துக்குடி அருகே ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் பொட்டல்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் மகன் அபிஷேக் (15). முத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்தில் உள்ள ஊருணியில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது ஊருணியில் சகதியில் சிக்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரா்கள் மீட்ட மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...