/

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

News image

லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி சென்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :29 மார்ச் 2026, 6:30 pm

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற பவனியில், ஏராளமானோா் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனா். சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இதேபோன்று தூத்துக்குடி திரு இருதய ஆலயம் சாா்பில், ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பிருந்து பங்குத்தந்தை செல்வன் பா்னாந்து தலைமையில், அமலன் தமியான் முன்னிலையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.