கயத்தாறு அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே ஆத்திகுளம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் நரசிம்மன் (66). இவா் கடம்பூரையடுத்த பரும்புகோட்டை கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது நொச்சிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கயத்தாறு போலீஸாா், நரசிம்மன் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநா் சூரிய மினுக்கன் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


