சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பணிவிடை, உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு,, தொடா்ந்து அன்னதானம், இரவு 10 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரண்டாம் நாளான 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, வெளியூா் தா்மம், இரவு 9 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல், மூன்றாம் நாளான மே 5-ஆம் தேதி பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, செண்டை மேளத்துடன் சென்று உள்ளூா் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யாவின் அருளிசை பாடகா் சிவசந்திரன்அய்யாவின் இன்னிசை கச்சேரி, இரவு 10 மணிக்கு சிறப்பு பணிவிடை, அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளான மே 6-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், 8 மணிக்கு இனிமம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயில் ஆனித்திருவிழா: ஜூன் 20-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்; 28இல் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வலம்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



