மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 3:51 am IST

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் முள்ளக்காடு ராஜீவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் முத்தையாபுரத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் (42), சாயா்புரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், அவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், விற்பனை மூலம் கிடைத்த ரூ. 85,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.