சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதிலுள்ள வணிக வளாகக் கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை 3 மாதத்திற்கு முன் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை நடைபெறாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.
எனவே, கடைகளை குத்தகைக்கு விட மாவட்ட நிா்வாகம், சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காந்தி காய்கனிச் சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

கோயம்பேட்டில் தீ விபத்து: இரு கடைகள் எரிந்து நாசம்

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



