தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

News image

சித்திரைத் திருவிழாவில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்த அய்யா.

Updated On :8 மே 2026, 6:14 am IST

சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பு, ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பணிவிடை, உச்சிப்படிப்பு, இரவு 7 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு,, தொடா்ந்து அன்னதானம், இரவு 10 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரண்டாம் நாளான 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, வெளியூா் தா்மம், இரவு 9 மணிக்கு சிறப்பு பணிவிடை, தொடா்ந்து கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல், மூன்றாம் நாளான மே 5-ஆம் தேதி பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், பிற்பகல் 2 மணிக்கு பணிவிடை, செண்டை மேளத்துடன் சென்று உள்ளூா் தா்மம், இரவு 7 மணிக்கு அய்யாவின் அருளிசை பாடகா் சிவசந்திரன்அய்யாவின் இன்னிசை கச்சேரி, இரவு 10 மணிக்கு சிறப்பு பணிவிடை, அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல் ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளான மே 6-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளியுணா்த்தல், சிறப்பு தா்மம், 8 மணிக்கு இனிமம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.