நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:18 am IST

தூத்துக்குடியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள சில்வா்புரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தாா். தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்து இருப்பது தெரியவந்தது.

இது தொடா்ந்து மீளவிட்டான் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.