எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

Updated On :11 மே 2026, 1:25 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் சுமாா் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி விசாகத் திருவிழா மே 30 - ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, மே 21 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் வசந்த விழா நடைபெறும்.

விழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் கோயில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.