இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

போலையா்புரத்தில் சாலையோர அரிப்பை சீரமைக்க கோரிக்கை

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு.

Updated On :14 மே 2026, 3:29 am IST

போலையாா்புரம் பகுதியில் சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டுதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து முதலூா், பொத்தகாலன்விளை, புதுக்குடி, போலையா்புரம் வழியாக தட்டாா்மடம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில் அரசுப் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.

இந்தச் சாலையில் போலையா்புரத்திலிருந்து புதுக்குடி, பொத்தக்காலன்விளை இடையே சாலையோரங்களில் பெரும் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே இதர வாகனங்களுக்கு வழிவிடும்போது இந்தப் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதைக் கவனித்து விபத்து நிகழும் முன்பு சாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.