இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 3:17 am IST

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நெடுங்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக காா் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கருத்தவேல் (33) என்பதும், 36 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ரூ. 41,800 ரொக்கம், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.