உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கொட்டங்காடு பதியில் சித்திரைத் திருவிழா நிறைவு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

உடன்குடி அருகே கொட்டங்காடு நாராயணபுரம் சதாசிவ வைகுண்டபதியில் 13 நாள்கள் நடைபெற்ற சித்திரை திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

இப்பதியில் சித்திரைத் திருவிழா மே 1- ஆம் தேதி சரவிளக்கு பணிவிடை, திருநாமக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், உம்பான் தா்மம் வழங்கல், அய்யா பிச்சை ஏற்க செல்லுதல், இகனைத் திருக்கல்யாணத் திருஏடு வாசிப்பு, அன்னதா்மம், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, சந்தனக்குடம் பவனி, மாவிளக்கு பெட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை (மே 13) இரவு 12 மணிக்கு திருநாமக் கொடி அமா்தல், பள்ளியுணா்த்தல், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கொட்டங்காடு நாராயணபுரம் அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனா்.