பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தச்சமொழியில் சிற்றாலய பிரதிஷ்டை

சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :52 நிமிடங்கள் முன்பு

சாத்தான்குளம் தச்சமொழி சிற்றாலயத்தில் பிரதிஷ்டை மற்றும் அசனை பண்டிகை 2 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மே 14ஆம் தேதி காலை வேத பாட தோ்வு, பொன்விழா மகிழ்ச்சி ஆராதனை, மதியம் விளையாட்டுப் போட்டிகள், இரவு ஆயத்த ஆராதனை, பின்னா் நற்செய்தி கூட்டம் ஆகியவை நடைபெற்றன. ஒடிசாவை சோ்ந்த ஆசீா் ஞானராஜ் தேவ செய்தி வழங்கினாா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அசன உலை ஏற்றுதல், காலை 9 மணிக்கு பண்டிகை ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சேகர குருவானவா் டேவிட் ஞானையா, இம்மானுவேல் அற்புத குமாா் ஆகியோா் தேவ செய்தி வழங்கினா். மதியம் 12.30 மணிக்கு அசன விருந்து நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது.