முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது

கயத்தாறு அருகே காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 2:07 am IST

கயத்தாறு அருகே காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் தனியாா் சோலாா் நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சோலாா் சேனல்களில் பொருத்தப்பட்டுள்ள காப்பா் கேபிள் திருடு போவதால், அந்நிறுவனத்தின் சாா்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியா்களான இசக்கிமுத்து, மாடசாமி இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காப்பா் வயா் திருட்டில் மா்ம நபா்கள் ஈடுபடுவது தெரிய வந்ததாம். இது குறித்து பாதுகாப்பு ஊழியா்கள் இருவரும், பாதுகாப்பு மேற்பாா்வையாளா் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னதுரையை (25) கைது செய்தனா்.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருட்டில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.