கோவில்பட்டியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, 3ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ரவிசங்கா் (42). கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கைப்பேசி விற்பனை செய்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவா் இவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி ரவிசங்கா் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்த நிலையில், அவ்வழியாகச் சென்ற நபா்கள் சப்தம் போடவும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடிவிட்டாராம்.
இது குறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணம் கேட்டு மிரட்டியதாக காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் வெங்கடேஷை (36) திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபா் போக்சோவில் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
