ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கோவில்பட்டியில் தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுமி காயம்

கோவில்பட்டியில் தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுமி காயமடைந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 12:41 am IST

கோவில்பட்டியில் தெரு நாய்கள் கடித்ததில் 4 வயது சிறுமி காயமடைந்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட புதுகிராமம் நாராயணகுரு தெருவைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது 4 வயது மகள் கோசிகா. திங்கள்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நாய் சிறுமியை துரத்தியது. சிறுமி கூச்சலிட்டபடி ஓடவே, அப்பகுதியில் உள்ள மேலும் சில நாய்கள் சிறுமியை சுற்றி வளைத்து கடித்தன. இதில் கீழே விழுந்த சிறுமியின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து நாய்களை விரட்டி சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிறுமியை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள்

தெருநாய்கள்

கோவில்பட்டி புதுகிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நாய்கள் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை துரத்திச் சென்று கடிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளனா். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதவிர, நகரின் முக்கிய சாலைகளான கோவில்பட்டி பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, கடலையூா் சாலை, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் தினந்தோறும் படாதபாடு படுகின்றனா். இந்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், உள்ளாட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கோவில்பட்டி பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.