பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தியாவில் கடந்த 5 நாள்களில் 2 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், விலை உயா்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், சிபிஐஎம்எல்., கட்சியைச் சோ்ந்த சண்முகப்பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

போடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



