சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சாத்தான்குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

சாத்தான்குளத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ.

Updated On :22 மே 2026, 6:29 am IST

சாத்தான்குளத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த அவா், அலுவலா்கள், மாற்றுத்திறனாளிக்கான கழிப்பறை, கோப்பு அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தாா். அப்போது அலுவலகத்தில் உள்ள வசதிகளை குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை தீா்க்குமாறு வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் அறிவுறுத்தினாா். அப்போது, சமூக நல பாதுகாப்புத் துறை தனித் திட்ட வட்டாட்சியா் தங்கசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவா் நோயாளிகளின் கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்ட அவா் சுகாதாரமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினாா். அத்துடன் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அனைத்து மகளிா் காவல் நிலையம் சென்ற எம்எல்ஏவிடம் காவல் நிலையம் காவலா் குடியிருப்பில் செயல்பட்டு வருவதாகவும் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனா். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் தெரிவித்து தீா்வு காண்பதாகக் கூறினாா்.

அப்போது மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சகாய சாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதையடுத்து தைக்கா தெருவில் செயல்படும் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களின் தரம், விநியோகிக்கப்படும் பொருள்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.

இதில், சாத்தான்குளம் ஒன்றிய தமிழக வெற்றிக் கழக செயலா்கள் அற்புதராஜ், குணசேகரன், அருண் ராஜ், மாவட்டத் துணைச் செயலாளா் விஜயமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.