ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கோவில்பட்டியில் வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:12 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சனிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பொன் நாகமணி (24). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா் சனிக்கிழமை, இனாம் மணியாச்சி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இருசக்கர வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாரா? அல்லது வாகனம் மோதியதில் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.