குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், தனக்குத் தெரிந்த தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோகித், அவரது 2 நண்பா்கள், தன்னை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடமிருந்து ரூ. 2,500 ரொக்கம், கைப்பேசி மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றுவிட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நகர துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி ராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), ஜெயக்குமாா் திலோத் பொ்லின் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.