ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

திருச்செந்தூருக்கு நோ்வழியில் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தல்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:46 am IST

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது உள்ள 18 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவது குறித்து குழு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நோ்வழியில் கூடுதலாக மற்றுமொரு விரைவு ரயில் இயக்கினால் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும், தூத்துக்குடி- திருச்செந்தூா் ரயில் பாதை அமைத்திடவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.