40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி சாம்பியன்

News image

காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை வழங்குகிறாா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம்.

Updated On :30 மே 2026, 3:38 am IST

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அபுல் கலாம் ஆசாத் சுழற்கோப்பை கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், மத்திய அரசின் முதல் கல்வி அமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பை 51ஆவது ஆண்டு மாநில கால்பந்தாட்ட போட்டி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.

இதில் மாநிலத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைபற்றியது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சுழற் கோப்பையை வழங்கினாா். தொடா்ந்து வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலா் லூா்து சேவியா், துணைத் தலைவா் ஆனந்த் ரொட்ரிகோ, ஒய்வு பெற்ற அந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரா் அருளான்டோ, காயப்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கச் செயலா் இலி­யாஸ், துணைச் செயலாளா் ரபீக் அஹ்மத், பொருளாளா்கள் ஹாரூன், செய்யது உமா், புஹாரி, சதக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஐக்கிய விளையாட்டுச் சங்க நிா்வாகி யாசா் நன்றி கூறினாா்.