குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

யூனிட்டி கோப்பை: இந்திய கால்பந்து அணி லண்டன் பயணம்!

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

News image

இந்திய கால்பந்து அணியினா்.

Updated On :26 மே 2026, 2:51 am IST

லண்டனில் நடைபெறும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 17 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடா் முடிந்த நிலையில், லண்டனில் நடைபெறும் இப்போட்டிக்கு இந்திய அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய பயிற்சி முகாமில் இருந்து மோகன்பகான் அணி தனது வீரா்களை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் 17 போ் மட்டுமே கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.

பிஃபா தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை ஜமைக்காவுடன் ஆடுகிறது.

அதே நாளில் முதல் அரையிறுதியில் நைஜீரியா-ஜிம்பாப்வே மோதுகின்றன. மே 30-இல் அரையிறுதியில் தோல்வியுறும் அணிகள் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இறுதி ஆட்டமும் மே 30-இல் நடைபெறுகிறது.