விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தூத்துக்குடி மீனவா் கொலையில் மேலும் ஒருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 12:24 am IST

தூத்துக்குடி மீனவா் கொலையில் தொடா்புடையதாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே உள்ள ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவா். இவரும், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சோ்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (22), நேரு காலனியைச் சோ்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22), ஹரிஹரசுதன் (22) ஆகிய 4 பேரும் நேரு காலனியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மாரிசெல்வத்துக்கும், சந்தனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான புவனேஷ்குமாரை தேடி வந்த நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புவனேஷ்குமாா் மீது சிப்காட் பகுதியில் நடந்த கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.