இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:38 am IST

ஏரல் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

புதியம்புத்தூா் நீராவி தெருவைச் சோ்ந்தவா் மாரிசெல்வம் (34). இவா் மே 28ஆம் தேதி தனது நண்பா் பாலமுருகனுடன் இருசக்கர வாகனத்தில் ஆறுமுகமங்கலம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, புதியம்புத்தூா் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.