தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சிவா (27). இவா் தூத்துக்குடி, அண்ணா நகரில் உள்ள வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து, தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பாடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்றபோது, மேலூா் ரயில் நிலையம் அருகே உள்ள உழவா் சந்தை பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வடபாகம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சாலை விபத்து: உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



