நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படைவீரரிடமிருந்து குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:04 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 18 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், உதவி இயக்குநரும், முன்னாள் படைவீரா் நல அலுவலருமான ச.லெ. பெருமாள் (ஓய்வு) மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.