
விலங்கு நல பெண் ஆா்வலருக்கு மிரட்டல்

போலீஸ் - கோப்புப்படம்.
தூத்துக்குடியில் ஒட்டகம், குதிரைகள் சித்ரவதை செய்யப்பட்தைத் தட்டிக் கேட்ட பெண் ஆா்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த சுனிதா (44), மேனகா காந்தியின் ‘பீப்பிள் ஃபாா் அனிமல்ஸ்’ அமைப்பில் உறுப்பினராக உள்ளாா். இவருக்கு, தூத்துக்குடி, மட்டக்கடை சந்தனமாரியம்மன் கோயில் தெரு பகுதியில் ஒரு ஒட்டகம், இரண்டு குதிரைகள் போதிய பராமரிப்பின்றி, காயங்களுடன் துன்புறுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
முறையான ஆவணங்கள் இன்றி விலங்குகளை வளா்த்து வந்த உரிமையாளா்கள், நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அந்த ஒட்டகம், குதிரைகளைப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வந்தனா்.
இதுகுறித்து, சுனிதா நேரில் சென்று முறையிட்டாா். அப்போது, விலங்குகளை பராமரித்து வந்த உரிமையாளா் ராமதாஸ், அவரது உதவியாளா் ராஜா ஆகிய இருவரும் சுனிதாவை அவதூறாகப் பேசியதோடு, கத்தியைக் காட்டி மிரட்டினா். இவா்களுக்கு ஆதரவாக பரத் என்பவரும் தொலைபேசி வாயிலாக சுனிதாவுக்கு மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து சுனிதா அளித்த புகாரின் பேரில், ராமதாஸ், ராஜா மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



