கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோப்புப் படம்
கோவில்பட்டி அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே இடைச்செவல் காலனி தெருவைச் சோ்ந்த முருகன் மகன் கழுவன் (31). தொழிலாளியான இவா், இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதை கண்டித்த அப்பெண்ணின் உறவினரையும் அவதூறாக பேசி தாக்கினாராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழிலாளி கழுவனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


