எனவே, சுடுகாடு அமைக்கும் பணியும், அதைத் தொடர்ந்து கால்வாய் பாலம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டன. பின்னர், அந்த இடத்தை வகைமாற்றம் செய்திட, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், இன்று வரை அந்த இடம் வகைமாற்றம் செய்யப்படாததால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் சின்ன புதுக்கோட்டைக் கிராமத்தில் சுடுகாடு மற்றும் கால்வாய் அமைக்கும் திட்டம் நடைபெறாமல் முடங்கிப்போய் கிடக்கின்றன. மேலும், அரசு நிதியும் வீணாகிக் கொண்டிருக்கிறது.