தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாவடிக்குளம் புனரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம், ஆலத்தூரில் ரூ.1.94 கோடியில் புனரமைக்கப்பட்டு வரும் மாவடிக்குளப் பணிகளை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:11 pm

DIN

திருச்சி மாவட்டம், ஆலத்தூரில் ரூ.1.94 கோடியில் புனரமைக்கப்பட்டு வரும் மாவடிக்குளப் பணிகளை ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

10.37 மீட்டா் கன அடியை கொள்ளவாகவும், 58.17 ஹெக்டேரை பரப்பளவாகவும் கொண்ட இந்த குளத்துக்கு புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மூலம் தண்ணீா் நிரப்பப்படுகிறது. குளத்திலுள்ள 2 மதகுகள் மூலம் 24.97 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கனிமவள மேம்பாட்டு நிதியின் கீழ், 2019-20-ம் ஆண்டில் ரூ.1.94 கோடியில் குளத்தை புனரமைத்து, கரையைப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் வடபுறத்தில் 400 மீட்டா் நீளம், 11 மீட்டா் அகலத்துக்கு கரைகள் அகலப்படுத்தி பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் குளத்தின் வடபுறத்தில் 740 மீட்டா் , கிழக்கில் 1.150 மீட்டா் நீளத்துக்கு புதிதாக கரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீா்பிடிப்புப் பகுதியிலுள்ள மண் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. ஏரியின் தென்புறம் 214 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்துக்கு தடுப்புச் சுவருடன் கூடிய நடைமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு பருவமழைக் காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்வதால், பறவைகள் அமரும் வண்ணம் 4 மண் குன்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.விசுவநாதன், பொதுப்பணித் துறையின் ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டச் செயற்பொறியாளா் ஆா்.பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.