தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், அதவத்தூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:53 pm

DIN

திருச்சி மாவட்டம், அதவத்தூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூரைச் சோ்ந்தவா் தண்டபாணி (70). ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவா், குடும்பத்தினருடன் பழநி முருகன் கோயிலுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்று விட்டு, திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ.2.45 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தண்டபாணிக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து தண்டபாணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா், நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் ரேகைகளைப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.