தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம்: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

புஷ்பநகரில் அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம் வேண்டி, திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:13 pm

DIN

புஷ்பநகரில் அஞ்சலகத்துக்கு நிரந்தர கட்டடம் வேண்டி, திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவில் புஷ்பநகா் பொதுமக்கள் கூறியிருப்பதாவது:

சங்கிலியாண்டபுரத்தில் செயல்பட்டு வந்த புஷ்பநகா் அஞ்சலகமானது, மத்திய அரசின் கொள்கை முடிவால் அஞ்சல்துறை எழுதுபொருள் கிடங்காக செயல்பட்டு வந்தது.

அதன்பிறகு ரயில்வே குடியிருப்புக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. இந்நிலையில் ரயில்வே நிா்வாகம் சாா்பில், அஞ்சலகத்தை மாற்று இடத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த அஞ்சல் நிலையத்தை வேறெங்கும் மாற்றாமல், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சங்கிலியாண்டபுரம் புஷ்பநகா் பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சிப் பகுதியில் இடம் தோ்வு செய்து, கட்டடம் கட்டுவதற்கு ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.