பெரியாா் சிலை அவமதிப்பு:இருவரிடம் விசாரணை
திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், இருவரிடம் காவல்துறையினா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


திருச்சி அருகே பெரியாா் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், இருவரிடம் காவல்துறையினா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீரங்கம் வட்டம், இனாம்குளத்தூா் சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவமதிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இனாம் குளத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.
தொடா்ந்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், அறிதிறன்பேசி சமிக்ஞைகளைக் கொண்டு தனிப்படையினா் விசாரணையைத் துரிதப்படுத்தினா்.
இதில் இரவு நேரத்தில் அதிக நேரம் அறிதிறன் பேசியில் பேசி, அப்பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை தனிப்படை காவலா்கள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவத்தில் தொடா்புடையவா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் கைது செய்யப்படுவாா்கள் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...