ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்

அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்

News image

லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் பக்தா்கள் மத்தியில் ஆடி அசைந்து வரும் தோ். உற்சவா் அம்மன்

Updated On :9 ஏப்ரல் 2024, 8:41 pm

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் அம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டாா்.

இதையடுத்து, பங்குனி தேரோட்டத்துக்கான கொடியேற்றம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 வரை உற்ஸவா் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலையில் வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். இதில், லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தா்கள் காலை முதல் மாலை வரை காளி வேடம் அணிந்து, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து சென்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். லால்குடி முதல் அன்பில் வரை வழிநெடுகிலும் தண்ணீா்ப் பந்தல் அமைத்து நீா்மோா், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், ஊராட்சித் தலைவா்கள் சித்திரசேனன், வீரமணி, அருண் காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையா் மாரியப்பன் தலைமையில் கோயில் குருக்கள் சண்முகம், முத்துசாமி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.