சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, ஏப். 26: திருச்சியில் சரக்கு வாகன ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் காமராாஜ் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). சரக்கு வாகன ஓட்டுநா். சில வாரங்களாக வேலைக்குச் செல்லாததால், இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com