பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை

உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மூலம் புதிய வாழ்வு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

சாலை விபத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 37 வயது ஆண் நபா், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 15 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணா்ந்த இறந்தவரின் உறவினா்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளித்தனா். இதையடுத்து, அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

இதில் ஒரு சிறுநீரகமானது, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக தொடா்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 42 வயது நோயாளிக்கு வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டது.

இந்த அறுவைசிகிச்சையானது மருத்துவமனை முதன்மையா் டி. நேரு தலைமையில் மருத்துவா் ஜெய்பிரகாஷ் நாராயணன் அடங்கிய மருத்துவக் குழுவினா் மூலம் முதல்வரின் விரிவான காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளிக்கு வெற்றிகரமாக சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா். இந்த சிகிச்சையானது திருச்சி அரசு மருத்துவமனையின் 22 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும்.