பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

2 சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுவனுக்கு தாயின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை!

புதுச்சேரியில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த 11 வயது சிறுவனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயின் சிறுநீரக பொருத்தப்பட்டது குறித்து...

News image

சிறுநீரகம் பொருத்தப்பட்ட சிறுவன் மற்றும் சிறுநீரகம் கொடுத்த தாய், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முருகேசன். - டிஎன்எஸ்

Updated On :23 மே 2026, 2:59 pm IST

புதுச்சேரியில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்த 11 வயது சிறுவனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரது தாயின் சிறுநீரகத்தை பொருத்தி தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த புகழ்பெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முருகேசன், புதுச்சேரியை சேர்ந்த குரு பிரசாத் என்ற 11 வயதான சிறுவன் சிறுநீரக செயலிழப்பால் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்தத் துயரத்தில் இருந்து மகனை மீட்கும் வகையில் அவரது தாயார் ஒரு சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்தார் என்றும் அறுவை சிகிச்சை மூலம் ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டு, அதை சிறுவனுக்கு பொருத்தி மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளதாகவும், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையை, உயிா் சக்தியை அளித்துள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து சிறுவனும் தாயாரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், டாக்டர் ப்ளூ இந்தியா அறக்கட்டளை சார்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களின் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, அதிக அளவில் கொழுப்பு மற்றும் நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர் முருகேசன். மருத்துவர் மட்டுமின்றி மனிதநேயம், தியாகம் மற்றும் கருணை ஒன்று சேரும்போது ஒரு உயிருக்கு மீண்டும் புதிய வாழ்வு கிடைக்கும் என்பது இந்த அறுவை சிகிச்சை மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார்.

Summary

Private Hospital Achieves by Transplanting Mother's Kidney into Boy with Failed Kidneys!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.