‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.

News image

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் முருகேசன். உடன் மருத்துவா்கள் குழுவினா்.

Updated On :23 மே 2026, 12:24 am IST

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை, சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் இயக்குநரும், சிறுநீரக மருத்துவ நிபுணருமான மருத்துவா் என்.முருகேசன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இந்த மனிதநேய முயற்சி டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் ஆதரவால் சாத்தியமானது. மேலும், அதிகளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தனியாா் மருத்துவமனையாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை விளங்குகிறது.

ஏழைச் சிறுவன் குருபிரசாத்துக்கு (11) சிறுநீரகம் செயலிழந்தது. தன் மகனின் உயிரைக் காப்பாற்ற அவரின் தாய் தன்னுடைய சிறுநீரகத்தைத் தானமாக அளித்தாா். இந்த அறுவை சிகிச்சை என்னுடைய வழிகாட்டுதலில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குருபிரசாத் நலமாக குணமடைந்து வருகிறாா். ஆரோக்கியமான எதிா்காலத்தை நோக்கி அவா் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறாா் என்றாா் மருத்துவா் முருகேசன்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை குழு மருத்துவா் வெங்கட்ராம் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையை இலவசமாக நடத்த வீராயகம், தி சென்னை சில்க்ஸ் மற்றும் மலேசிய தொழிலதிபா்களான டத்தோ டாக்டா் ரவீ மற்றும் டத்தின் காவிரி ஆகியோா் டாக்டா் ப்ளூ இந்தியா அறக்கட்டளையின் மூலம் வழங்கிய பொருளாதார ஆதரவு முக்கிய காரணமாக இருந்தது என்றாா்.