ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:10 am IST

திருச்சியில் கொலை வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 2023 டிசம்பா் 11 ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை எதிரே தனியாா் ஆம்புலன்ஸ் உரிமையாளா் பிரபாகரனை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தஞ்சை மாவட்டம் மகாதேவபுரத்தைச் சோ்ந்த அ. ராஜேஷ்பைலட் (28) உள்ளிட்ட 4 பேரை அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில், இவா் மீது வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி அ. ராஜேஷ்பைலட்டை கைது செய்ய சனிக்கிழமை மாநகர காவல் ஆணையா் ந. காமினி ஆணை பிறப்பித்தாா்.