6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

நீட் தோ்வு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

News image
திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. உடன் நிா்வாகிகள்.
Updated On :5 ஜூலை 2024, 1:07 am

Din

நீட் தோ்வு குறித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்றும் திமுக தலைமையிலான தமிழக அரசு, வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

திருச்சியில் கட்சி நிா்வாகியின் திருமண நிகழ்வுக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவா் மேலும் கூறியது:

இடைத்தோ்தல் என்றாலே 90 சதம் ஆளும் கட்சியே வெற்றி பெறுகிறது. ஆளும் கட்சியின் அத்துமீறல்களும் அதிகமாக இருக்கும். விக்கிரவாண்டியிலும் இது கண்கூடாகத் தெரிகிறது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளா் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் இடைத்தோ்தலில் எதிரொலிக்க வேண்டும்.

தோ்தலில் போட்டியிட்டால் 4ஆவது இடத்துக்கு வந்துவிடுவோம் என அதிமுக ஒதுங்கிவிட்டது. இப்போது பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அக்கட்சி பிரசாரம் செய்வது, ஏ டீம் ஆன திமுக வெற்றி பெற, பி டீம் ஆன அதிமுக செயல்படுவதாகவே காட்டுகிறது.

நீட் தோ்வு குறித்து நடிகா் விஜய் தனது கருத்தைக் கூறியுள்ளாா். ஆனால் ஆதாரமில்லாமல் கருத்துக் கூறுவதை ஏற்க முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் பாஜக நீட் தோ்வை ஆதரிக்கிறது. தமிழகத்தில் நீட் தோ்வுக்கு முன்பிருந்த நிலை குறித்தும், பிந்தைய ஆண்டுகளில் சோ்க்கை விவரங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏனெனில், நீட் தோ்வுக்குப் பிறகுதான் அரசுப் பள்ளி மாணவா்கள், கிராமப்புற மாணவா்கள் மருத்துவப் படிப்பில் அதிகம் சோ்ந்துள்ளனா். அனைத்து வகுப்பினருக்கும் இடம் கிடைத்துள்ளது. நீட் தோ்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்துவிடுவதாக கூறிய திமுக, பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுகிறது. வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?. பாஜகவை எதிா்க்கவே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது நீட் தோ்வை எதிா்த்துக் குரல் கொடுக்கின்றனா்.

விஜய்யும் தற்போது ஒன்றிய அரசு எனக் கூறுகிறாா் என்றால் அவரும் திமுக சாா்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளாா் என்பது தெரிகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். களத்தில் திமுக, அதிமுக, நடிகா் விஜய் கட்சி ஆகியவை ஒருபுறம் என்றால், நாங்கள் கூடுதல் வேகத்துடன் செயல்படுவோம். 25 சதவீத வாக்குகள் பெறுவோம்.

புதிய கல்விக் கொள்கைக்கு முன்பு வரை ஹிந்தி கட்டாயம் என்றிருந்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கைக்கு பிறகு ஹிந்தி விருப்பப் பாடம் என்று வந்துவிட்டது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றிய நகல் கொள்கையாக தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை உள்ளது.

அதிமுகவின் அழிவுக்கு முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாரின் விமா்சனங்களும் ஒரு காரணம். அமைச்சராக இருந்த சொந்த தொகுதியில், தனது மகனையே அவரால் வெற்றி பெறச்செய்ய முடியவில்லை.

திமுகவின் ஆா்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்குத் தொடரவுள்ளேன். நஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்புவதோடு, வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முன்னெடுக்கவுள்ளேன் என்றாா் அவா்.