நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி மாநகா் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2024, 10:04 pm

Din

திருச்சி: மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 10) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் ஜூலை 10 ஆம் தேதி இருக்காது.

எனவே, அன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

ஜூலை 11 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும்.