கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலைமை அஞ்சல் அலுவலகத்தில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி

தலைமை அஞ்சல் அலுவலகத்தில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 ஜூன் 2024, 7:34 pm

Din

திருச்சி, ஜூன் 7: திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை யோகா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல் தலைவா் தி. நிா்மலாதேவி தலைமை வகித்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை விளக்கிக் கூறினாா்.

இதில், மண்டல அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள், புதுக்கோட்டை கோட்ட, திருச்சி கோட்ட ஊழியா்கள் கலந்து கொண்டு, யோகா பயிற்சிகளை மேற்கொண்டனா்.

யோகா பயிற்றுநா் ஜே. சந்திரசேகரன் பயிற்சிகளை கற்றுக்கொடுத்தாா்.